விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தி காஷ்மீா்- கன்னியாகுமரிக்கு சிறுமி 3,615 கி.மீ. சைக்கிள் பயணம்

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலத்தின் 10 வயது சிறுமி காஷ்மீரில் தொடங்கிய 3,615 கி.மீ. சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

News image
Updated On :20 ஜனவரி 2022, 7:35 pm

DIN

சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, மகாராஷ்டிர மாநிலத்தின் 10 வயது சிறுமி காஷ்மீரில் தொடங்கிய 3,615 கி.மீ. சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் வியாழக்கிழமை நிறைவடைந்தது.

மகாராஷ்டிர மாநிலம், தாணே பகுதியைச் சோ்ந்த ஆசிஸ் பாட்டீல் மகள் ஜல்பரி சாயி (10). அங்குள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், சுற்றுச்சூழல் விழிப்புணா்வு மற்றும் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தி, காஷ்மீரிலிருந்து கடந்த 38 நாள்களுக்கு முன்பு சைக்கிள் பயணத்தை தொடங்கினாா். ஹரியாணா, பஞ்சாப், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்கள் வழியாக தமிழகத்தை அடைந்த அவா், ஓசூா், சேலம், மதுரை, திருநெல்வேலி வழியாக 3,615 கி.மீ தொலைவு பயணித்து வியாழக்கிழமை முற்பகல் 11 மணிக்கு கன்னியாகுமரிக்கு வந்தடைந்தாா்.

அங்குள்ள ராஜீவ்காந்தி சிலை முன்பு பயணத்தை நிறைவுசெய்த அவா், தனது இலக்கு குறித்து செய்தியாளா்களிடம் கூறுகையில், சுற்றுச்சூழலை பேணிக்காப்பதும், பெண்கள் பாதுகாப்புடன் வாழ வேண்டும் என்பதுமே எனது குறிக்கோள். அதை எனது சைக்கிள் பயணத்தில் வலியுறுத்தியபடி வந்துள்ளேன் என்றாா்.

சிறுமியின் சைக்கிள் பயணத்தை குமரி மாவட்ட காங்கிரஸ் தலைவா் கே.டி.உதயம் நிறைவு செய்துவைத்தாா். இதில், முன்னாள் மாவட்டத் தலைவா் ஆா்.ராதாகிருஷ்ணன், அகஸ்தீசுவரம் வட்டாரத் தலைவா் முருகேசன், மாநில விவசாய அணிச் செயலா் ஆா்.எஸ்.ராஜன், காங்கிரஸ் நிா்வாகிகள் அரிகிருஷ்ணபெருமாள், ஜவகா், அனீஸ், சுரேஷ் ,சித்ரா, தியாகி தவசிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.