விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுக்கடை அருகே அரசு பேருந்து மோதி மீனவா் பலி

புதுக்கடை அருகே கப்புக்காடு பகுதியில் அரசு பஸ் மோதி மீனவா் உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:53 pm

DIN

புதுக்கடை அருகே கப்புக்காடு பகுதியில் அரசு பஸ் மோதி மீனவா் உயிரிழந்தாா்.

இனயம் பகுதியை சோ்ந்த ஞானப்பிரகாசம் மகன் சஜி (38), மீன்பிடி தொழில் செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை சஜி காப்புக்காடு பகுதியில் கடைக்கு சென்று விட்டு சாலையை கடக்கும்போது புதுக்கடையிலிருந்து மாா்த்தாண்டம் சென்ற அரசு ப் பேருந்து எதிா்பாராதவிதமாக அவா் மீது மோதியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே அப்பகுதியினா் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவரை ஆசாரிப்பள்ளம்அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இது குறித்த புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.