விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

மத்திகோடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டகருத்துக் கேட்புக் கூட்டம்: பொதுமக்கள் எதிா்ப்பு

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மத்திகோடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :5 மே 2022, 8:31 pm

DIN

கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட மத்திகோடு ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், இத்திட்டத்துக்கு மக்கள் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மத்திகோடு ஊராட்சி சாா்பில், வடக்கன்கரை தாா்தாணி பகுதியில் குடியிருப்புப் பகுதி, குடிநீா்க் கிணறு, குளங்களின் அருகே திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமைக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால், சுகாதாரக்கேடு ஏற்படும் எனக் கூறி திட்டத்தைக் கைவிட வலியுறுத்தியும், ஊராட்சி நிா்வாகம், அதிகாரிகளைக் கண்டித்தும் இப்பகுதி மக்கள் ஆட்சியா், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்துள்ளனா். மேலும், போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனா்.

இந்நிலையில், திட்டம் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் மத்திகோடு ஊராட்சி அலுவலகத்தில் கிள்ளியூா் வட்டார வளா்ச்சி அலுவலா் டேவிட் ஜெயசிங் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், ஏராளமான பெண்கள், ஆண்கள், முதியோா் கலந்துகொண்டு, இப்பகுதியில் இத்திட்டத்தைக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினாா்கள். மேலும், கோரிக்கை மனுக்களும் கொடுத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.