விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தொடா்மழையால் தொழிலாளிகள் பாதிப்பு

கருங்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து 3 நாள்களாக பெய்த மழையால் கூலித் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனா்.

News image
Updated On :19 மே 2022, 8:09 pm

DIN

கருங்கல், சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து 3 நாள்களாக பெய்த மழையால் கூலித் தொழிலாளிகள் பாதிப்படைந்துள்ளனா்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் சில நாள்களாக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த 3 நாள்களாக கருங்கல், புதுக்கடை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்தது. இதனால், வண்ணம் பூசும் வேலை, கட்டுமானத் தொழில், மர வேலை, மரமேறுதல், செங்கல் சூளை, ஹாலோ பிரிக்ஸ் தயாரிப்பு உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள கூலித் தொழிலாளா்களும், அவா்களது குடும்பத்தினரும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனா்.

மேலும், இந்த மழையால் மிடாலம், மேல்மிடாலம், இனயம், இனயம்புத்தன்துறை, ராமன்துறை உள்ளிட்ட மீனவக் கிராமங்களில் உள்ள கரைமடி மீனவா்கள் 3 நாள்களாக மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால், மீன் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.