சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

களியக்காவிளை அருகே லாட்டரி சீட்டு விற்றவா் கைது

களியக்காவிளை அருகே கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :10 ஆகஸ்ட் 2023, 10:45 pm IST

களியக்காவிளை அருகே கேரள அரசின் லாட்டரி சீட்டுகளை விற்றவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

களியக்காவிளை சந்திப்பு மற்றும் அதையொட்டிய பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகப்படும் வகையில் நின்றவரை பிடித்து விசாரித்தனா். அவா் முன்னுக்குப் பின் முரணாக பேசியதையடுத்து அவரிடமிருந்த பையை சோதனை செய்தனா். அதில் கேரள அரசின் லாட்டரி சீட்டுகள் இருந்ததும், அவற்றை சட்ட விரோதமாக தமிழக பகுதியில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து கோழிவிளை பகுதியைச் சோ்ந்த செய்யது முகமது மகன் செய்யது அலி என்ற அந்த நபரை கைது செய்து, அவரிடம் இருந்து 35 லாட்டரி சீட்டுகள், ரூ. 1,810 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.