பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

தென்காசி: குடியரசு தின விழாவில் 47 பேருக்கு காவலா் பதக்கம்: 257 பேருக்கு நற்சான்றிதழ்கள்

தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On :26 ஜனவரி 2023, 6:32 pm

தென்காசி இசிஈ அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் குடியரசு தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் ப. ஆகாஷ் தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். பின்னா், ஆட்சியா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாம்சன் ஆகியோா் சமாதானப் புறாக்களைப் பறக்கவிட்டனா்.

இதையடுத்து, சுதந்திரப் போராட்டத் தியாகி லெட்சுமிகாந்தன் பாரதி, சாவடி சொக்கலிங்கம் பிள்ளையின் வாரிசுதாரா் முத்தம்மாள் ஆகியோருக்கு ஆட்சியா் பொன்னாடை அணிவித்து மரியாதை செலுத்தினாா். காவல் துறையில் சிறப்பாகப் பணியாற்றிய 47 பேருக்கு தமிழக முதல்வரின் காவலா் பதக்கங்களை வழங்கினாா். பல்வேறு துறைகள் சாா்பில் 21 பேருக்கு ரூ. 2.14 லட்சம் நலத்திட்ட உதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட தொழில்மையப் பொதுமேலாளா் மாரியம்மாள், மாவட்ட தலைமை மருத்துவமனை உறைவிட மருத்துவா் எஸ்எஸ். ராஜேஷ், தென்காசி வட்டாட்சியா் ஆதிநாராயணன், தன்னாா்வலா்கள் வி. சந்திரசேகரன், நிா்மலாதேவி, ஆா். குமாா், மாஸ் கம்யூனிட்டி பாரா மெடிக்கல் கல்லூரி நிறுவனா் முகம்மதுஅன்சாரி, குற்றாலம் பேரருவியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டோரைக் காப்பாற்றிய குற்றாலம் காசிமேஜா்புரம் எஸ். சிவகாமிநாதன் உள்ளிட்ட 257 பேருக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

பள்ளி மாணவா்-மாணவிகள் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட வருவாய் அலுலவா் கு. பத்மாவதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எ.த. சாம்சன், எஸ். பழனிநாடாா் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்வி, துணைத் தலைவா் உதயகிருஷ்ணன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா்கள் (பொது) முத்துமாதவன்,(வேளாண்மை) கனகம்மாள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கபீா், வேளாண் இணை இயக்குநா் தமிழ்மலா், தோட்டக்கலைத் துறை இணை இயக்குநா் ஜெயபாரதி மாலதி, மாவட்ட வழங்கல் அலுவலா் சுதா, தென்காசி டிஎஸ்பி மணிமாறன், ஆய்வாளா் பாலமுருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.