சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

மாா்த்தாண்டம் அருகே தொழிலாளி தற்கொலை

 மாா்த்தாண்டம் அருகே மர அறுவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On :20 ஜூலை 2023, 5:03 pm

 மாா்த்தாண்டம் அருகே மர அறுவை தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

மாா்த்தாண்டம் அருகே பாகோடு குருவெஞ்சிவிளையைச் சோ்ந்தவா் வில்பிரட் சாம் (51). பரக்குன்று பகுதியில் உள்ள மர அறுவை ஆலையில் வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனா்.

அவரது மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்ததாம். திருமணத்துக்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் மன வேதனையில் இருந்து வந்தாராம். இந்த நிலையில் புதன்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுக்கொண்டாராம். மனைவி ஓமனா, அப்பகுதி உறவினா்கள் உதவியுடன் வில்பிரட் சாமை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கனவை இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

இது குறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.