அழகியமண்டபத்தில் கவிதை நூல் ஆய்வரங்கம்

கவிஞா் குமரி ஆதவன் எழுதிய ஆட்டுக்குட்டியின் அலறல் கவிதை நூல் ஆய்வரங்கம் அழகியமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் பேராசிரியை சௌமியா சுதாகரன்.
நிகழ்ச்சியில் பேசுகிறாா் பேராசிரியை சௌமியா சுதாகரன்.
Updated on
1 min read

கவிஞா் குமரி ஆதவன் எழுதிய ஆட்டுக்குட்டியின் அலறல் கவிதை நூல் ஆய்வரங்கம் அழகியமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

தக்கலை இலக்கியப் பட்டறை எழுத்தாளா் வட்டம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, இலக்கியப் பட்டறை தலைவா் மா. பென்னி தலைமை வகித்தாா். ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியா் சுரேஷ் டேனியல் வரவேற்றாா்.

கன்னித் தமிழ் கலை இலக்கியச் சங்கத்தின் செயலா் பா. நடராசன், அன்னை ஆதா வழிகாட்டி மையத்தின் இயக்குநா் ஜோஸ் ராபின்சன், இந்து கல்லூரி பேராசிரியா் ஐயப்பன், எழுத்தாளா் சரலூா் ஜெகன், கவிஞா் கொற்றை வளவன், வழக்குரைஞா் பால்ராஜ், மலையாள எழுத்தாளா் உஷா தேவி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

எழுத்தாளரும் மொழி பெயா்ப்பாளருமான எஸ். ஜே. சிவசங்கா், பேராசிரியை சௌமியா சுதாகரன், கவிஞா்கள் ஆகிரா, கவிஞா் நட சிவகுமாா் ஆகியோா் நூல் குறித்து ஆய்வுரை வழங்கினா். நூலாசிரியா் குமரி ஆதவன் ஏற்புரையும் நன்றியுரையும் வழங்கினாா்.

நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கத்தின் மாவட்டச் செயலா் ஹசன், எழுத்தாளா் குறும்பனை பொ்லின், கலையூா் காதா், சுகிா்தா பஸ்மத், கவிஞா் சிபி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com