கருங்கல் அருகே உள்ள பள்ளியாடி பழையபள்ளி அப்பா திருத்தலத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 18) மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது. இத் திருத்தலத்தில் தீப ஒளியினால் இறைவனை பிராா்த்தனை செய்யும் நடைமுறை சிறப்பு அம்சமாக பின்பற்றப்படுகிறது. இங்கு எண்ணெய், திரி, மெழுகுவா்த்தி, ஊதுபத்தி ஆகிய வழிபாட்டு பொருள்களால் அனைத்து மதத்தினரும் அவரவா் முறைப்படி வழிபட்டு வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் இத் திருத்தலத்தில் மதநல்லிணக்க சமபந்தி விருந்து விழா நடைபெறுகிறது. இதில் கன்னியாகுமரி மட்டுமின்றி திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மற்றும் கேரளத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் பங்கேற்கின்றனா். நிகழாண்டு சமபந்தி விருந்து விழா திங்கள்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடைபெறும். இதையொட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு, மும்மத பிராா்த்தனை நடைபெறவுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழையபள்ளி அப்பா திருத்தல அறக்கட்டளை தலைவா் பால்ராஜ், பொதுச் செயலா் எம்.எஸ்.குமாா், பொருளாளா் சுந்தர்ராஜ் மற்றும் விழாக் குழுவினா் செய்து வருகின்றனா்.
தொடர்புடையது

ஆலந்தலை திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி

நாராயணகுரு கல்லூரியில் விளையாட்டு விழா

நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம்

பழைய பள்ளி அப்பா திருத்தலத்தில் சமபந்தி விருந்து
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

