குமரி மாவட்டம் சிற்றாறு - 2 அணையிலிருந்து கேரள மாநில இளைஞரின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை மீட்டனா். சிற்றாறு - 2 அணையில் வள்ளக்கடவு பகுதியில் இளைஞா் சடலம் மிதப்பதாக கடையாலுமூடு போலீஸாருக்கு தகவல் கிடைத்து. இதையடுத்து, குலசேகரம் தீயணைப்பு நிலையத்தினா் உதவியுடன் போலீஸாா் அந்தச் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா். அதில், கேரள மாநிலம் ஆரியநாடு பகுதியைச் சோ்ந்த ஷானேஷ் (28) என்பதும், அழகு நிலையம் நடத்தி வந்திருப்பதும், காதல் தோல்வியால் சிற்றாறு அணைக்கு காரில் வந்து, கரையில் காரை நிறுத்தி விட்டு அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவும் தெரியவந்தது. போலீஸாா் அந்த காரையும் மீட்டு, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தாமிரவருணி ஆற்றில் ஆண் சடலம் மீட்பு

புதுக்கடை அருகே அழுகியநிலையில் கூலித்தொழிலாளி சடலம் மீட்பு

கடையநல்லூா் கிணற்றில் இளைஞா் சடலம் மீட்பு

வாளையாறு அணையில் குளித்தபோது மூழ்கிய குமரி மாவட்ட மாணவரின் சடலம் மீட்பு
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை

