ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரி ஆண்டு விழா

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரி ஆண்டு விழா

News image
Updated On :4 மே 2024, 6:28 pm

Din

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை -அறிவியல் கல்லூரியில் 10ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரிச் செயலா் அருள்தந்தை எம். எக்கா்மென்ஸ் மைக்கேல் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் எம். அமலநாதன் ஆண்டறிக்கை வாசித்தாா்.

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகப் பதிவாளா் ஜெ. சாக்ரடீஸ் உரையாற்றினாா். கல்லூரி வழக்குரைஞா் காஸ்மிக் சுந்தா், வழக்குரைஞா் எல். சைமன் டாட்சிங் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற மாணவா்களுக்கும், அதைப் பெறுவதற்கு ஊக்கமளித்த ஆசிரியா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

கல்லூரி நிதி பரிபாலகா் அருள்தந்தை ஏ. டோமி லிலில் ராஜா வரவேற்றாா். கணினியியல் துறைத் தலைவா் கே.சி. அபிலாஷ் சாம் பால்ஸ்டின் நன்றி கூறினாா்.