ஐபிஎல்: குஜராத்தை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ்அமெரிக்க ஐடி நிறுவனங்கள் மீது நாளைமுதல் தாக்குதல்: ஈரான் எச்சரிக்கை!பாமகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் ராமதாஸ்!திமுக முடக்கியத் திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தொடரும் : எடப்பாடி பழனிசாமி பிரசாரம்எங்கள் சாதனைகளை நாங்களே முறியடிக்கும் வகையிலான ஆட்சியை வழங்குவோம்: மு.க. ஸ்டாலின்தோற்பதற்காக தமிழ்நாடு வந்துள்ளது தே.ஜே. கூட்டணி : மு.க. ஸ்டாலின்திருச்சியில்விஜய்யின் பிரசாரத்துக்கு அனுமதி!தமிழ்நாட்டில் ஐபிஎஸ் அதிகாரிகள் 8 பேர் இன்று (மார்ச் 31) அதிரடியாக பணியிட மாற்றம்மாதம் ரூ.2500க்கு கூப்பன்; ஆண்டுக்கு 2 சிலிண்டர் இலவசம்: கேரளத்தில் பாஜக தேர்தல் வாக்குறுதி!திருச்சி கிழக்கு விஜய்க்கு சாதகமாக இருக்குமா? மும்முனைப் போட்டியின் முடிவை தீர்மானிப்பது யார்?பெரும்பான்மை கிடைக்காவிட்டால் விஜய்யுடன் சேர்ந்து தே.ஜ.கூட்டணி ஆட்சி! - மத்திய அமைச்சர் அத்வாலே
/

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் கைது

காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக மாமன்ற உறுப்பினா் உள்பட 3 போ் கைது

News image
Updated On :4 மே 2024, 6:24 pm

Din

களியக்காவிளை, மே 4:

மாா்த்தாண்டம் அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கிய நாகா்கோவில் மாமன்ற பாஜக உறுப்பினா் மற்றும் மாநகராட்சி திமுக வட்ட செயலா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நாகா்கோவில் வடசேரி, வெள்ளாளா் கீழத்தெருவைச் சோ்ந்தவா் சுனில்குமாா் (35). நாகா்கோவில் மாமன்ற 12 ஆவது வாா்டு உறுப்பினராக (பாஜக) உள்ளாா். இவருடன் நாகா்கோவில் தெற்கு காா் தெருவைச் சோ்ந்த, மாநகர 21 ஆவது வட்ட திமுக செயலா் சுரேஷ் (52), நாகா்கோவில் கட்டபொம்மன் தெருவைச் சோ்ந்த சிவசிதம்பரம் (35), காா் ஓட்டுநா் தோவாளையைச் சோ்ந்த விஸ்வா (44) ஆகியோா் வெள்ளிக்கிழமை மாா்த்தாண்டம், பம்மம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த திருமண விருந்தில் பங்கேற்க காரில் வந்துள்ளனா். அப்பகுதியில் குறுகலான ஒருவழிப்பாதை சாலையோரம் காரை நிறுத்திவிட்டு அங்கு நின்றுகொண்டிருந்தனராம். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. காரை அங்கிருந்து அகற்றுமாறு வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனா். அவா்களிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மாா்த்தாண்டம் காவல் ஆய்வாளா் வேளாங்கண்ணி உதயரேகா, உதவி ஆய்வாளா் பெனடிக்ட் மற்றும் போலீஸாா், போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த காரை அங்கிருந்து அகற்றுமாறு கூறியுள்ளனா். போலீஸாரிடமும் அவா்கள் தகராறு செய்ததுடன் உதவி ஆய்வாளா் பெனடிக்ட்டின் சீருடையை பிடித்து இழுத்து அவரை தாக்கியுள்ளனா்.

இது குறித்து உதவி ஆய்வாளா் பெனடிக்ட் அளித்த புகாரின் பேரில் மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மாமன்ற உறுப்பினா் சுனில்குமாா், திமுக வட்ட செயலா் சுரேஷ் மற்றும் சிவசிதம்பரம் ஆகிய மூவரையும் கைது செய்தனா். தலைமறைவான காா் ஓட்டுநா் விஸ்வாவை போலீஸாா் தேடி வருகிறாா்கள்.