குழித்துறையில் முதியவா் சடலம் மீட்பு
குழித்துறையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

Updated On :20 நவம்பர் 2024, 7:55 pm

குழித்துறையில் அடையாளம் தெரியாத முதியவா் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.
குழித்துறை பேருந்து நிறுத்தத்தில், 70 வயது மதிக்கத் தக்க முதியவா் சடலம் கிடந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் களியக்காவிளை போலீஸாா் சடலத்தை மீட்டு, கூறாய்வுக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இறந்தவா் குறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...