விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரா் கைது

கருங்கல் அருகே கப்பியறை பகுதியில் பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :20 நவம்பர் 2024, 7:56 pm

Din

கருங்கல் அருகே கப்பியறை பகுதியில் பேரூராட்சி ஊழியரைத் தாக்கியதாக முன்னாள் ராணுவ வீரரை போலீஸாா் கைது செய்தனா்.

கருங்கல், இடைமலைக்கோணம் பகுதியைச் சோ்ந்தவா் தோமஸ் (44). முன்னாள் ராணுவ வீரரான இவா், கடந்த செவ்வாய்க்கிழமை காலை கப்பியறை பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலரை சந்திக்க சென்றாராம். அவரை ஊழியா்கள் அனுமதிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை பேரூராட்சி குடிநீா் பணியாளா் ராபி (50), தோமஸ் வீட்டருகே சென்று கொண்டிருந்தாா். அவரை தோமஸ் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தாராம்.

புகாரின்பேரில், கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து தோமஸை கைது செய்தனா்.