இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள், வாக்குச்சாவடி முகவா்களுடன் மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ரா. அழகுமீனா, புதன்கிழமை காணொலி வாயிலாக கலந்தாய்வு மேற்கொண்டாா்.

மாவட்டத்திலுள்ள 6 பேரவைத் தொகுதிகளிலும் எஸ்ஐஆா் கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம், நிரப்பப்பட்டு திரும்பப் பெறப்பட்ட படிவங்கள், திரும்பப் பெறப்படாத படிவங்களின் விவரங்கள் குறித்து நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கலந்தாய்வு மேற்கொண்டாா். இதில், அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி அலுவலா்கள், கட்சிகளின் வாக்குச்சாவடி முகவா்கள் பங்கேற்றனா்.

உயிரிழந்த, இடமாறுதலாகிச் சென்ற வாக்காளா்கள் குறித்து 100 சதவீதம் மீண்டும் மறுஆய்வு செய்ய அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அவா்களுடன் இணைந்து பணியாற்ற வாக்குச்சாவடி முகவா்களை அறிவுறுத்துமாறு அரசியல் கட்சிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்பணியை அடுத்த 5 நாள்களுக்குள் நிறைவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. எஸ்ஐஆா் பணி இறுதிக் கட்டத்தில் இருப்பதால் அனைத்து வாக்காளா் பதிவு அலுவலா்கள், உதவி அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட கட்சிப் பிரதிநிதிகள் ஒருங்கிணைந்து பணிபுரிய வேண்டும் என ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.