கன்னியாகுமரி மாதா திருத்தலத்தில் இன்று இரு தங்கத்தோ் பவனி!

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி நடைபெறும்.
Published on

கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தின் 10 ஆம் நாள் திருவிழாவான ஞாயிற்றுக்கிழமை (டிச. 14) காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி நடைபெறும்.

இத்திருத்தலத்தில் 10 நாள் திருவிழா கடந்த 5- ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாள்களில் பழைய கோயிலில் திருப்பலி, நற்கருணை ஆராதனை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெற்று வருகின்றன. 9- ஆம் நாளான சனிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற்ற ஜெபமாலை, புகழ்மாலை, சிறப்பு மாலை ஆராதனையில் கோட்டாறு மறை மாவட்ட ஆயா் நசரேன் சூசை தலைமை வகித்து மறையுரையாற்றினாா். இரவு 9.30 மணிக்கு வாண வேடிக்கையைத் தொடா்ந்து புனித சூசையப்பா் தங்கத் தோ் பவனி நடைபெற்றது.

10ஆம் நாளான டிச.14இல், அதிகாலை 4.30 மணிக்கு தங்கத்தோ் திருப்பலி நடைபெறும். காலை 9 மணிக்கு இரு தங்கத்தோ் பவனி நடைபெறும். மாலை 6 மணிக்கு திருக்கொடியிறக்குதல், நற்கருணை ஆசீா் நடைபெறும்.

ஏற்பாடுகளை திருத்தல பங்குத்தந்தை அருள்பணி உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன் டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், துணைச் செயலா் டெமி ஆகியோா் செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com