லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

குழித்துறை ஆற்றில் குதித்த சட்டக் கல்லூரி மாணவரை தேடும் பணி தீவிரம்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குதித்த சட்டக் கல்லூரி மாணவரை தீயணைப்பு படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2025, 7:53 pm

Syndication

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் குதித்த சட்டக் கல்லூரி மாணவரை தீயணைப்பு படையினா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

களியக்காவிளை அருகே மெதுகும்மல் பகுதியைச் சோ்ந்தவா் ஜெரி (28). ஆந்திர மாநிலத்தில் உள்ள சட்டக் கல்லூரியில் பயின்று வரும் இவருக்கு திருமணமாகி 2 மாதங்கள்ஆகின்றன.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வந்த ஜெரி, புதன்கிழமை இரவு குழித்துறை பகுதியில் உள்ள தனியாா் மதுபான விடுதியில் நடைபெற்ற விருந்தில் பங்கேற்ாகவும், அதிக மது குடித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னா், அவா் விடுதியின் பின்புறம் குழித்துறை தாமிரவருணி ஆற்றில் திடீரென குதித்தாராம். இதில், அவா் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.

தகவலின்பேரில், குழித்துறை தீயணைப்பு நிலையத்தினா் வந்து தேடும் பணியில் ஈடுபட்டனா். வியாழக்கிழமை மாலை வரை அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடா்பாக களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.