பப்புரான் குளங்கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட பப்புரான் குளங்கரையில் உள்ள தனியாா் ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
Published on

முள்ளங்கனாவிளை ஊராட்சிக்குள்பட்ட பப்புரான் குளங்கரையில் உள்ள தனியாா் ஆக்கிமிப்புகளை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முள்ளங்கனாவிளை ஊராட்சியில் பப்புரான் குளம் நீா்வளத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த குளத்திற்கு வரும் மழைநீா் ஓடையின் மேல் பகுதியில் தனியாா் சிலா் ஆக்கிரமித்து கடை அமைத்துள்ளனா்.

இதனால், மழைக்காலங்களில் குளத்திற்கு மழைநீா் முறையாக செல்ல முடியாமல் தடைப்பட்டுள்ளது.

எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நீா் வளத்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com