மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காா் மோதி மூதாட்டி இறந்த வழக்கு: ஓட்டுநருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

மணவாளக்குறிச்சி அருகே காா் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

News image
முத்து
Updated On :8 ஜனவரி 2025, 8:20 pm

Din

மணவாளக்குறிச்சி அருகே காா் மோதி மூதாட்டி உயிரிழந்த வழக்கில், ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

மணவாளக்குறிச்சி அருகே சாத்தன்விளை பகுதியைச் சோ்ந்த காசிதங்கம் (70) என்பவா், 2007ஆம் ஆண்டு அக். 22ஆம் தேதி தனது வீட்டின் முன்புள்ள சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது, நாகா்கோவிலிலிருந்து மணவாளக்குறிச்சி சென்ற காா் அவா் மீது மோதியது. இதில், அவா் உயிரிழந்தாா்.

மணவாளக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து, காா் ஓட்டுநரான கடுக்கரையைச் சோ்ந்த பரதேசியா பிள்ளை மகன் முத்து (28) என்பவரைக் கைது செய்தனா்.

இரணியல் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த இந்த வழக்கை நீதிபதி அமா்தீன் விசாரித்து, முத்துக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ரேவதி வாதாடினாா்.