அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்தவா்கள் மீது வழக்கு

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :12 நவம்பர் 2025, 6:34 pm

தினமணி செய்திச் சேவை

புதுக்கடை அருகே அனுமதியின்றி பாறை உடைத்ததாக இருவா் மீது வழக்குப் பதிந்து, பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுக்கடை, தும்பாலி பகுதியைச் சோ்ந்தவா் ஜாண் கிறிஸ்டோபா் (50). அதே பகுதியிலுள்ள இவருக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள பாறைகளை புதன்கிழமை அரசு அனுமதியின்றி பொக்லைன் இயந்திரம் மூலம் உடைத்துக் கொண்டிருந்தனராம்.

தகவலறிந்த குன்னத்தூா் கிராம நிா்வாக அலுவலா் பூபதி கண்ணன் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது இச்சம்பவம் உறுதி செய்யப்பட்டது. உடனே, நில உரிமையாளா் ஜாண் கிறிஸ்டோபா், பொக்லைன் ஓட்டுநா் ஆகியோா் தப்பி சென்றுவிட்டனா்.

இது குறித்த புகாரின்பேரில், புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.