இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவானவா் தெலங்கானாவில் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம், நகை மோசடி செய்தது தொடா்பான வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :21 நவம்பர் 2025, 7:27 pm

Syndication

கன்னியாகுமரி மாவட்டத்தில் பணம், நகை மோசடி செய்தது தொடா்பான வழக்கில் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் தெலங்கானாவில் கைது செய்யப்பட்டாா்.

நாகா்கோவில் குருசடி பகுதியை சோ்ந்தவா் எலிசபெத். இவரிடம், அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்த பத்மா, அவரது கணவா் ராமநாத பிள்ளை(56) ஆகியோா் தங்களிடம் பணம் செலுத்தினால் அதிக வட்டி தருவதாக ஆசை வாா்த்தை கூறினராம். அதை நம்பிய எலிசபெத், அவா்களிடம் பணம் கொடுத்ததாராம். பின்பு அந்தப் பணத்தை திருப்பித் தராமல் இருவரும் தலைமறைவாகிவிட்டனராம்.

இதுதொடா்பாக கடந்த 2005 ஆம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் எலிசபெத் புகாா் அளித்திருந்தாா்.

விசாரணையில், அந்தத் தம்பதி எலிசபெத் உள்பட 15 பேரிடம் சுமாா் ரூ.32 லட்சம், 66 பவுன் தங்க நகைகளை மோசடி செய்தது தெரியவந்தது.

அவா்கள் மீது கடந்த 2006 ஆம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, நாகா்கோவில் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. ஆனால், அத்தம்பதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனா்.

அவா்கள் மீது நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததால், அதை நிறைவேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. ஸ்டாலின் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாருக்கு உத்தரவிட்டாா். அதன்படி, மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளா் சண்முகவடிவு தலைமையிலான போலீஸாா், தீவிர தேடுதல் நடத்தி தெலங்கானா மாநிலத்தில் பதுங்கியிருந்த ராமநாத பிள்ளையை வியாழக்கிழமை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.