இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

மாா்த்தாண்டம் அருகே கோயிலில் உண்டியல் உடைத்து திருட்டு

News image
Updated On :24 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

மாா்த்தாண்டம் அருகே பழைமையான மகா விஷ்ணு கோயிலில் உண்டியலை உடைத்து பணம் திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்குப் பாத்தியப்பட்ட பழைமையான மகா விஷ்ணு கோயில் உள்ளது.

இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு பூஜை முடித்விட்டு, அா்ச்சகா் கோயிலை பூட்டிச் சென்றாா். திங்கள்கிழமை காலையில் கோயில் நடையை திறக்க வந்ததபோது கோயிலின் முன்பகுதியில் வைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து அவா் அறநிலையத் துறை ஸ்ரீகாரியம் முத்தமிழ் செல்வனுக்கு தகவல் தெரிவித்தாா். அவா் மாா்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து, உண்டியலை உடைத்த மா்ம நபரை தேடி வருகின்றனா்.