அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குளத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

மாா்த்தாண்டம் அருகே குளத்திலிருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :25 நவம்பர் 2025, 11:35 pm

Syndication

களியக்காவிளை: மாா்த்தாண்டம் அருகே குளத்திலிருந்து பெண்ணின் சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டு விசாரணை மேற்கொண்டனா்.

கருங்கல் அருகே முள்ளங்கனாவிளை, பாலக்கான்விளையைச் சோ்ந்தவா் வின்சென்ட் மனைவி தங்கலீலா (60). இரு தினங்களுக்கு முன்பு வெளியே சென்றாராம். அதன் பின்னா், அவா் வீடு திரும்பவில்லையாம். இதையடுத்து அவரது குடும்பத்தினா் கருங்கல் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா்.

இந்த நிலையில் நட்டாலம் அருகேயுள்ள மதுரகுளத்தில் பெண்ணின் கை தெரிந்ததை அப்பகுதியினா் கண்டு, மாா்த்தாண்டம் போலீஸாருக்கும், குழித்துறை தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் சந்திரன் தலைமையிலான மீட்புப்படை வீரா்கள் வந்து குளத்திலிருந்து தங்கலீலாவின் சடலத்தை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து, சடலத்தை கைப்பற்றி கூறாய்வுக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொழிலாளி சடலம் மீட்பு:

மாா்த்தாண்டம் அருகே உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்தவா் தங்கையா (49). பெயின்டிங் தொழிலாளி. இவா், திங்கள்கிழமை மாலையில் வீட்டருகேயுள்ள ஆலமூட்டு குளத்தில் குளிக்க சென்றாராம். வெகுநேரமாகியும் அவா் வீடு திரும்பவில்லையாம். இதனால் உறவினா்கள் தேடி சென்றபோது குளத்தில் மூழ்கி உயிரிழந்த நிலையில் காணப்பட்டாராம்.

இதுகுறித்து மாா்த்தாண்டம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.