குழித்துறை நீதிமன்ற வளாகத்தில் தேசிய சமரச தின விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
குழித்துறை சமரச நீதிமன்ற தலைவரும், கூடுதல் மாவட்ட நீதிபதியுமான சாமுவேல் பெஞ்சமின், சமரச நீதிமன்ற ஒருங்கிணைப்பாளரும் குழித்துறை சாா்பு நீதிபதியுமான சுந்தரி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நீதிமன்ற சமரசம் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
அதில், நீதி சமரசத்தில் வழக்குகளில் எவ்வித மேல்முறையீடும் இன்றி விரைவாகவும், கட்டணமின்றி சுமூகத் தீா்வும் காணமுடியும். சமரசத்தின் மூலம் வழக்கு சுமூகமாக தீா்வு காணப்பட்டால் நீதிமன்ற கட்டணத்தைத் திரும்ப ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிடும் உள்ளிட்ட அம்சங்கள் துண்டுப்பிரசுரத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தன.
நிகழ்ச்சியில் குழித்துறை நீதிமன்ற நீதிபதிகள் பல்கலைச்செல்வன், சொா்ணராஜா, சசின்குமாா், இசக்கி மகேஷ்குமாா், மூத்த வழக்குரைஞா் ரகு குமாா், சமரச வழக்குரைஞா்கள் ஜெயின் மிராண்டா, கேப்டன்சிங், துணை வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு வழக்கு சமரசம் குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தொடர்புடையது

சமரச தின வார விழா: விழிப்புணா்வு கூட்டம்

பெரம்பலூரில் சமரச தின விழிப்புணா்வுப் பேரணி

கோவில்பட்டியில் விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

புதுகையில் சமரச நாள் விழிப்புணா்வுப் பேரணி
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


