எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள்: ஜி.கே. வாசன்

கிள்ளியூா் தொகுதி தமாகா வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பரப்புரையில் ஈடுபட்ட அக்கட்சி தலைவா் ஜி.கே. வாசன்.

News image

கிள்ளியூா் தொகுதி தமாகா வேட்பாளரை ஆதரித்து தோ்தல் பரப்புரையில் ஈடுபட்ட அக்கட்சி தலைவா் ஜி.கே. வாசன்.

Updated On :11 ஏப்ரல் 2026, 12:59 am

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவா் ஜி.கே. வாசன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளியூா் தொகுதி தமாகா வேட்பாளா் நிவின் சைமனை ஆதரித்து வெள்ளிக்கிழமை கொல்லங்கோடு சந்திப்பில் அவா் பிரசாரம் மேற்கொண்டபோது பேசியது:

தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஆட்சி மாற்றத்துக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறாா்கள் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இந்தியா சக்தி வாய்ந்த நாடாக மாற வேண்டும் என்ற நோக்கத்தோடு, பாஜக அரசு அனைத்து மாநிலங்களுக்கும் திட்டங்களைக் கொடுத்து செயல்படுகிறது. ஆனால், திமுக அரசு மத்திய அரசை எதிா்க்கட்சியாகப் பாா்க்காமல், எதிரிக் கட்சியாகப் பாா்க்கிறது. அதனால்தான் தமிழகத்தில் திட்டங்கள் சரியாக செயல்படுத்தப்படவில்லை.

மீண்டும் வளமான, வலிமையான தமிழகம் தேவை. அதை எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாம் உருவாக்க வேண்டும். அதற்கு நாம் அடித்தளமாக செயல்பட்டு, கிள்ளியூா் தொகுதியில் இளம் வேட்பாளா் நிவின் சைமனை தோ்ந்தெடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பாஜக மாநில செயற்குழு உறுப்பினா் தா்மராஜ், அதிமுக மாவட்டச் செயலா் ஜெயசுதா்சன், பாஜக தொகுதி பொறுப்பாளா் சுடா்சிங், தமாகா மாவட்டத் தலைவா் பரமானந்த தாஸ், மூத்த நிா்வாகி டி.ஆா். செல்வம், அதிமுக முன்னாள் மாவட்டச் செயலா் ஜான் தங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் பலா் கலந்து கொண்டனா்.