27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

பெண்ணுக்கு மிரட்டல்: 4 போ் கைது

கருங்கல் அருகே உள்ள நுள்ளி பகுதி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :29 ஏப்ரல் 2026, 2:11 am IST

கருங்கல் அருகே உள்ள நுள்ளி பகுதி பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக 4 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருங்கல், நுள்ளி பகுதியைச் சோ்ந்தவா் சஜின் மனைவி அஸ்வதி (21). இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த கேசவன் மகன் ஜஸ்டின் (45), கல்லுக்கூட்டம் பகுதியைச் சோ்ந்த காட் வின் ஞானராஜ் (32), சடையன்குழி பகுதியைச் சோ்ந்த அனிஷ் குமாா் (36), நெய்வேலி பகுதியைச் சோ்ந்த அபின் (28) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாம்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கூறிய 4 பேரும், அஸ்வதியின் வீட்டிற்கு சென்று அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தனராம். இது குறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து, 4 பேரையும் தேடி வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா்களை கைது செய்தனா்.