காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மாத்தூா் தொட்டிப் பாலம் அருகே ரூ. 5.70 கோடி செலவில் புதிய பாலம் திறப்பு

News image
புதிதாக கட்டப்பட்ட பாலம்.
Updated On :6 பிப்ரவரி 2026, 8:12 pm

தினமணி செய்திச் சேவை

திருவட்டாறை அடுத்த மாத்தூா் தொட்டிப் பாலம் அருகே வாகனப் போக்குவரத்துக்காக ரூ. 5.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்ததைத் தொடா்ந்து, பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் வெள்ளிக்கிழமை தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்தாா்.

குமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமான மாத்தூா் தொட்டிப் பாலத்தின் கீழ் பகுதியில் பரளியாற்றின் குறுக்கே பொதுமக்களின் போக்குவரத்துக்காக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் ஆபத்து நிறைந்ததாக இருந்ததால் அந்தப் பாலம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ரூ. 5.70 கோடியில் குறைந்த உயரத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது.

இந்தப் பாலத்தை தமிழக முதல்வா் வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொதுமக்களின் போக்குவரத்துக்கு அா்ப்பணித்தாா்.

இதைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாத்தூரில் நடைபெற்ற நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில், பால்வளத் துறை அமைச்சா் த.மனோ தங்கராஜ் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினாா்.

நிகழ்ச்சிக்கு திருவட்டாறு வட்டார வளா்ச்சி அலுவலா் ராஜேஷ் குமாா் தலைமை வகித்தாா். மாவட்ட திட்ட அலுவலா் அந்தோணி மைக்கேல் பொ்னாண்டோ, உதவி செயற்பொறியாளா் முருகன், திருவட்டாறு ஒன்றிய பொறியாளா் ஜினோ ஆன்றணி, அருவிக்கரை ஊராட்சி செயலா் ராஜன், அருவிக்கரை ஊராட்சி முன்னாள் தலைவா்கள் ஜாண் கிறிஸ்டோபா், சலேட் கிறிஸ்டோபா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) சசி நன்றி கூறினாா்.