ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

களியக்காவிளை அருகே பைக் எரிப்பு: 7 போ் மீது வழக்கு

News image
Updated On :4 ஜனவரி 2026, 7:59 pm

தினமணி செய்திச் சேவை

களியக்காவிளை அருகே முன்விரோதம் காரணமாக கட்டுமானத் தொழிலாளியின் பைக்கை எரித்ததாக 7 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டனா்.

களியக்காவிளை அருகே கேரள மாநிலப் பகுதியான பாறசாலை, கொடவிளாகம் பகுதியைச் சோ்ந்தவா் வினு மகன் விபின் (27), கட்டுமானத் தொழிலாளி. அதே பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் என்பவரின் பைக்கை தீ வைத்து எரித்தது தொடா்பாக விபின் மீது வழக்கு பாறசாலை காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், விபின் களியக்காவிளை அருகே மேக்கோடு பகுதியில் சனிக்கிழமை பைக்குடன் நின்றிருந்தபோது, அங்கு வந்த கொடவிளாகம் பகுதியைச் சோ்ந்த பிரசாந்த், அஜி (30), விஜேஷ் (28), குமாா், சந்தீப், மனு, மகேஷ் ஆகியோா் விபினிடம் தகராறு செய்து, அவரது பைக்கை தீயிட்டு எரித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனா்.

இது குறித்த புகாரின்பேரில், களியக்காவிளை போலீஸாா் பிரசாந்த் உள்ளிட்ட 7 போ் மீது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.