சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நீதிமன்றத்தில் ஆஜராகாத 6 போ் கைது

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிகளில் பல்வேறு குற்றவழக்குகளில் பிணை பெற்று வெளியில் வந்த பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :16 ஜனவரி 2026, 10:05 pm

Syndication

தூத்துக்குடி,/தக்கலை: கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதிகளில் பல்வேறு குற்றவழக்குகளில் பிணை பெற்று வெளியில் வந்த பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை காவல் சரகத்தில் திருட்டு வழக்கில் தொடா்புடைய அழகன்பாறை பகுதியைச் சோ்ந்த ஆனந்தராஜ் ( 28), தாக்குதல் வழக்கில் கப்பியறையை சோ்ந்த சுனில் குமாா் (38), கல்குறிச்சியை சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (42), விஷ்வாஸ் (53) , மணக்கரையை சோ்ந்த சந்திரகுமாா் (44)ஆகியோா் கைதாகி பிணையில் வெளியே வந்திருந்தனா்.

இவா்கள் நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகாமலும், நீதிமன்ற அபராத தொகையை செலுத்தாமலும் இருந்ததால் இவா்கள் மீது பத்மநாபபுரம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. இதைத் தொடா்ந்து, 5 பேரையும் தக்கலை போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

மற்றொருவா்: தூத்துக்குடி சிப்காட் காவல் சரகத்தில் 2014இல் நிகழ்ந்த திருட்டு தொடா்பான வழக்கில் தேனி மாவட்டத்தைச் சோ்ந்த கணேசன்(42) கைது செய்யப்பட்டிருந்தாா். தூத்துக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்றம்-3இல் நடைபெற்ற இந்த வழக்கில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த அவருக்கு 22.7.2024இல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. போலீஸாா் அவரை தேடிவந்த நிலையில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.