தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

1,400 லி. மண்ணெண்ணெய் கடத்தல்: 3 இளைஞா்கள் கைது

குளச்சல் அருகே முட்டத்தில் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்த முயன்ாக 3 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 12:04 am IST

குளச்சல் அருகே முட்டத்தில் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய்யை கேரளத்துக்கு கடத்த முயன்ாக 3 இளைஞா்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குளச்சல் கடலோர பாதுகாப்பு காவல் ஆய்வாளா் சாந்தி தலைமையிலான போலீஸாா் குளச்சல், மணவாளக்குறிச்சி, முட்டம், கடியப்பட்டினம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, முட்டம் சோதனைச் சாவடி பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக வந்துகொண்டிருந்த கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி சோதனை செய்ததில், மீனவா்களுக்கு மானியமாக வழங்கப்படும் 1,400 லிட்டா் மண்ணெண்ணெய் 40 கேன்களில் இருப்பது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், காரை ஓட்டி வந்த குழித்துறை பகுதியைச் சோ்ந்த சிஜின் (28), மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த தீபக் (22), கிரிஸ்டல் ஆனந்த் (28) ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.