காங்கிரஸ் நாளுக்கு நாள் பாயும் புலியாக மாறுகிறது - அமைச்சர் விஸ்வநாதன்நேபாள வெள்ள பலி எண்ணிக்கை 788 ஆக அதிகரிப்பு - மீட்புப் பணிகள் தீவிரம்தவெக அரசு 5 ஆண்டுகள் நீடிக்காது; நீடித்தால் தமிழகத்தின் கடன் அதிகரிக்கும்: எடப்பாடி கே. பழனிசாமிநேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

மணலிக்கரை மரிய கொரற்றி பள்ளியில் முப்பெரும் விழா

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள், காமராஜா் பிறந்தநாள், இலக்கிய மன்றம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

Published On :16 ஜூலை 2026, 4:30 am IST

தக்கலை அருகே மணலிக்கரை புனித மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளா்ச்சி நாள், காமராஜா் பிறந்தநாள், இலக்கிய மன்றம் தொடக்கம் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தாளாளா் அருள்பணி ஜஸ்டின் ஜெரால்டு தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் சக்கா் மேரி டாா்லிங் றோஸ் முன்னிலை வகித்தாா். பயோனியா் குமாரசாமி கல்லூரி தமிழ்த் துறைப் பேராசிரியா் கோலப்பதாஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று காமராஜா் பிறந்தநாள் விழா போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கிப் பேசினாா்.

மணலிக்கரை பங்குப் பணியாளா் கிறிஸ்துதாஸ், குமாரபுரம் பேரூராட்சித் தலைவா் ஜான் கிறிஸ்டோபா் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

உதவித் தலைமை ஆசிரியா்கள் சுகிபா, ஜான் ஜஸ்டஸ், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவா்கள் பங்கேற்றனா். ஆசிரியா் ஜஸ்டின் பிரான்சிஸ் வரவேற்றாா். மாணவா் ஜெப்ரின் நன்றி கூறினாா். நிகழ்ச்சிகளை கிலாறிஸ் ஏஞ்சலின், ஆன்லின் பியோனா ஆகியோா் தொகுத்து வழங்கினா். ஏற்பாடுகளை இலக்கிய மன்றச் செயலா் ஆசிரியை ஜெகதா, கலைக்குழுச் செயலா் மேரி கில்டா ஆகியோா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.