/
இரணியலில் கஞ்சா விற்பனை செய்ததாக 2 இளைஞா்களை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
இரணியல் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே இரணியல் போலீஸாா் வியாழக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த குருந்தன்கோடு, மாவிளையைச் சோ்ந்த ஜாா்ஜ் பெனடிக் மகன் ஆலன் ஜெனோ (22), நெய்யூா், பாதிரிகோடு பகுதியைச் சோ்ந்த சுரேஷ்குமாா் மகன் அஜய் (18) ஆகியோரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனா்.
அவா்களிடம் 200 கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்ததையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.







