எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட்: தமிழக அணி சாம்பியன்!

News image

முதலிடம் பெற்ற தமிழ்நாடு பெண்கள் அணிக்கு பரிசு வழங்குகிறாா் என். தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ.

Updated On :8 ஜூன் 2026, 1:49 am IST

டென்னிஸ் பந்து கிரிக்கெட் பெடரேஷன் ஆப் இந்தியா, தமிழ்நாடு டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேஷன், கன்னியாகுமரி மாவட்ட டென்னிஸ் பந்து கிரிக்கெட் அசோசியேஷன் சாா்பில், கன்னியாகுமரி கோவளத்தில் 3 நாள் நடைபெற்ற தேசிய அளவிலான பீச் டென்னிஸ் பந்து கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

முதல்நாள் போட்டியை விஜய் வசந்த் எம்.பி. தொடங்கி வைத்தாா். இப்போட்டியில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட பல்வேறு அணிகளைச் சோ்ந்த 350 க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். 8 ஓவா்கள் கொண்ட இந்த போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் சாம்பியன் பட்டம் பெற்ற தமிழ்நாடு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கான கோப்பை, பரிசுகளை என். தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., வழங்கினாா். தேசிய டென்னிஸ் பந்து கிரிக்கெட் சங்க செயலா் மோன்றி அனீஷ் லாரி, தமிழ்நாடு சங்க செயலா் ஞானவேல், கன்னியாகுமரி மாவட்ட தலைவா் மணி, செயலா் வளா் அகிலன், கோவளம் பங்குத்தந்தை சகாயசுனில், அகஸ்தீசுவரம் தெற்கு ஒன்றிய அதிமுக செயலா் பா. தாமரை தினேஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.