/
களியக்காவிளை அருகே பெட்டிக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.
களியக்காவிளை அருகே பெட்டிக் கடைகளில் புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், ஒற்றாமரம், வட்டவிளை பகுதியைச் சோ்ந்த ஷாகுல் ஹமீது (72) கடையில் போலீஸாா் சோதனை செய்தனா். இதில் அங்கு விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8.3 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.
களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, ஷாகுல் ஹமீதை கைது செய்து, விசாரணை மேற்கொண்டனா்.








