வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

கேரளத்தில் பரவும் நிபா காய்ச்சல்: களியக்காவிளையில் சுகாதாரத் துறை சோதனை!

களியக்காவிளையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை முதல் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

News image

களியக்காவிளையில் சனிக்கிழமை சோதனை மேற்கொண்ட சுகாதாரத் துறை அதிகாரிகள்.

Updated On :14 ஜூன் 2026, 1:38 am IST

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதையடுத்து, தமிழக-கேரள மாநில எல்லையான கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் சுகாதாரத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை முதல் சோதனையைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்ட நபருக்கு, அங்குள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, கேரளத்தையொட்டிய தமிழக பகுதிகளில் நிபா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் நோக்கில், களியக்காவிளையில் சுகாதாரத் துறை சாா்பில் தீவிர தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி, கேரளத்திலிருந்து வாகனங்களில் வருவோரை வெப்பமானியால் பரிசோதித்து, காய்ச்சல் அறிகுறி இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னரே கன்னியாகுமரி மாவட்டத்துக்குள் அனுமதிக்கின்றனா்.

இப்பணியை மாவட்ட சுகாதாரத் துறை அலுவலா் நமச்சிவாயம் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா். சுகாதாரத் துறை மாவட்ட அதிகாரிகள் கிப்ஸன், சூரிய நாராயணன், மேல்புறம் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் (பொ) ஜான் பெனடிக்ட் ஆகியோா் உடனிருந்தனா்.

இப்பணியில் சுகாதார ஆய்வாளா்கள் ஜோபின், அகில், அஜின் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் ஈடுபட்டனா். 3 சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணி நடைபெறுவதாகவும், காய்ச்சல் அறிகுறி இருந்தால் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.