ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

17 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது

கடையில் விற்பனைக்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:22 am IST

களியக்காவிளை அருகே கடையில் விற்பனைக்காக சட்ட விரோதமாக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, கடை உரிமையாளரை கைது செய்தனா்.

களியக்காவிளை பகுதியில் சட்ட விரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் களியக்காவிளை மற்றும் அதையொட்டிய பகுதி கடைகளில் போலீஸாா் வெள்ளிக்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

இதில் சேரிவிளை வீட்டைச் சோ்ந்த குமாரசாமி மகன் குமாா் (50) என்பவரின் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 17 கிலோ புகையிலைப் பொருள்கள் கண்டறிந்து பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து களியக்காவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.