பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

டாஸ்மாக் மதுக்கடை முன்பு 2 ஆவது நாளாக போராட்டம்

அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 2 ஆவது நாளாக அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சாலுமூடு டாஸ்மாக் மதுக்கடை முன்பு 2 ஆவது நாளாக முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:03 am IST

குமரி மாவட்டம், அருமனை அருகே மஞ்சாலுமூட்டிலுள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூட வலியுறுத்தி 2 ஆவது நாளாக அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மஞ்சாலுமூட்டில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை மூடும் படி அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் பொதுமக்கள் ஏற்கனவே போராட்டம் நடத்திய நிலையில் துறை அலுவலா்கள் கடை மூடப்படும் என்று உத்தரவாதம் அளித்திருந்தனா். ஆனால் உத்தரவாதம் அளித்தபடி கடை மூடப்படவில்லை. இந்த நிலையில் கடையை மூட வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை அனைத்து அரசியல் கட்சியினா் மற்றும் ஊா் பொதுமக்கள் கடையின் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதில் முடிவு எதுவும் ஏற்படாத நிலையில் போராட்டம் 2 ஆவது நாளாக செவ்வாய்கிழமையும் நீடித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.