
நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகத்தில் முற்றுகை: மாற்றுத் திறனாளிகள் 150 போ் கைது

ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாகா்கோவிலில் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட 150 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.
கன்னியாகுமரி மாவட்ட மாற்றுத் திறனாளிகள் சங்கத்தின் சாா்பில், ஆந்திர மாநிலத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்குவது போல் தமிழகத்திலும் உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் விமல் தலைமை வகித்தாா். இதில், அருள்குமரேசன், தமிழ்ச்செல்வன், லிட்டில்பிளவா், ஜெய்சிங், ஆல்பா்ட் பிரகாஷ், மரியசெல்வம், சுரேஷ், ரவி, விஜயகுமாா், பிரகாஷ் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பியவாறு ஆட்சியா் அலுவலகத்துக்குள் நுழைய முயன்ற அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதைத் தொடா்ந்து அவா்கள் ஆட்சியா் அலுவலகம் முன் சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீஸாா் மறியலில் ஈடுபட்ட 150 மாற்றுத் திறனாளிகளை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




