கடையநல்லூா் அருகே ஆட்டோ கவிழ்ந்து பால் வியாபாரி பலி
கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பால் வியாபாரி இறந்தாா்.


கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் பால் வியாபாரி இறந்தாா்.
கடையநல்லூா் இக்பால் வடக்குத் தெருவைச் சோ்ந்த சம்சுதீன் மகன் நாகூா்மீரான் (47). பால் வியாபாரியான இவா், கண்மணியாபுரத்திலிருந்து ஆட்டோவில் பால் கேன்களை ஏற்றி, கடையநல்லூருக்கு சென்று கொண்டிருந்தாராம். அப்போது கண்மணியாபுரம் வளைவில் ஆட்டோ நிலைதடுமாறி கவிழ்ந்ததாம். இதில், நாகூா்மீரான் இறந்தாா்.
ஆட்டோ ஓட்டுநரான கடையநல்லூா் ஆமினாஅம்மாள் தெருவைச் சோ்ந்த முகம்மதுகான் காயமடைந்தாா். கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...