சுரண்டையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
சுரண்டையில் கடந்த 3 நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமாா் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால், தெருக்களில் ஏற்பட்ட வெள்ளநீா் செண்பக கால்வாய் வழியாக இலந்தைகுளத்தை அடைந்தது.
ஏற்கெனவே நிரம்பும் தருவாயில் இருந்த இந்தக் குளம் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.