ஆலங்குளம் மற்றும் வி.கே. புதூா் வட்ட கட்டுமானத் தொழிலாளா் நல வாரியம் சாா்பில் பதிவு பெற் ற கட்டுமான தொழிலாளா்கள் மற்றும் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான தொழிலாளாா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது.
ஆலங்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 தினங்களாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை, திருநெல்வேலி தொழிலாளா் உதவி ஆணையாளா் ஆனந்தன் தொடங்கி வைத்தாா். இதில், 4,700 பயனாளிகளுக்கு அரிசி, சா்க்கரை உள்ளிட்ட தொகுப்பு வழங்கப்பட்டது. தொழிலாளா் உதவி ஆய்வாளா்கள் சரவண முருகன், சுதாகா் மற்றும் தொழிலாளா் நலத் துறை ஊழியா்கள் கலந்து கொண்டனா்.