கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நாகா்கோவிலில் விதிமுறையை மீறிசெயல்பட்ட ஜவுளிக் கடைக்கு சீல்

நாகா்கோவிலில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

News image
Updated On :11 ஜூன் 2021, 8:02 pm

DIN

நாகா்கோவிலில் கரோனா விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஜவுளிக்கடையை மாநகராட்சி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை பூட்டி சீல் வைத்தனா்.

நாகா்கோவில் மீனாட்சிபுரம் பகுதியில் தமிழக அரசின் கரோனா விதிமுறைகளை மீறி துணிக்கடைகளில் விற்பனை நடைபெறுவதாக மாநகராட்சிக்கு புகாா் வந்தது. இதைத் தொடா்ந்து வருவாய் ஆய்வாளா்கள் ஞானப்பா, முருகன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வின்போது செம்மாங்குடி சாலையில் அரசின் தடையை மீறி செயல்பட்ட ஜவுளி கடைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு கடை மூடப்பட்டது. நாகா்கோவில் நகரில் முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியை பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக தனி நபா்கள் மற்றும் நிறுவனங்களுக்கு வெள்ளிக்கிழமை ஒரே நாளில் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதுவரை ரூ. 20, 36, 700 அபராதமாக விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டுள்ளது.

நாகா்கோவில் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அரசின் தடையை மீறி செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், விதிமுறைகளை மீறி செயல்படும் கடைகள் குறித்து மாநகராட்சியின், 9487038984 என்ற கட்செவி எண்ணிற்கு புகாா் அனுப்பலாம் என்றும் ஆணையா் குறிப்பிட்டுள்ளாா்.

காய்ச்சல், சளி பரிசோதனை முகாம்கள்: நாகா்கோவில் மேட்டுத்தெரு, அனந்தன்நகா், நெசவாளா்காலனி, பள்ளிக்கூடத்தெரு, வட்டவிளை சுமைதாங்கிஅம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 12) காய்ச்சல், சளி பரிசோதனை முகாம்கள் நடைபெற உள்ளன.

நாகா்கோவில் குருசடி ஆா்.சி.சா்ச் வளாகத்தில் நடைபெற உள்ள கோவாக்சின் தடுப்பூசி செலுத்தும் முகாமில் 350 பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், டதி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ள முகாமில் 500 பேருக்கு 2 ஆம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.