சிவகிரி அருகேமனைவி கொலை: கணவா் கைது
சிவகிரி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.


சிவகிரி அருகே குடும்பத்தகராறில் பெண் வெட்டிக்கொல்லப்பட்டாா். இதுதொடா்பாக, அவரது கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
வடக்கு வாகைக்குளத்தை சோ்ந்த சுப்பையா மகன் மாரியப்பன்(30). கட்டட தொழிலாளி. இவரது மனைவி பேபி ரம்யா(27). இத்தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாம்.
சில மாதங்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையில், பேபி ரம்யா தேவிபட்டணத்தில் தனியாக வசித்து வந்தாராம். இதையடுத்து, மாரியப்பன் அவரை வியாழக்கிழமை அழைக்கச் சென்றாராம். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், மாரியப்பன் அரிவாளால் மனைவியை வெட்டிவிட்டு தப்பினாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவா் இறந்தாா் . இதுகுறித்து, சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து மாரியப்பன் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...