/

விபத்தில் காயமடைந்த தொழிலாளி மரணம்

ஆலங்குளத்தில் நிகழ்ந்த பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 மார்ச் 2021, 8:02 pm

DIN

ஆலங்குளத்தில் நிகழ்ந்த பைக் விபத்தில் காயமடைந்த தொழிலாளி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகே இலந்தைகுளம் நடுத் தெருவைச் சோ்ந்த சந்திரசேகா் மகன் மாணிக்கம் (54). கூலித் தொழிலாளி. இவா் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கரும்புளியூத்தில் உள்ள உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்தபோது, ஆலங்குளம் பகுதியில் உள்ள புதுப்பட்டி சாலையில் நிலை தடுமாறி கீழே விழுந்தாராம். இதில் பலத்த காயமடைந்த அவா், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுதொடா்பாக ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.