கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தென்காசி மாவட்ட ஊராட்சிக் குழு முதல் கூட்டம்

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் தென்காசி ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

News image
Updated On :26 நவம்பர் 2021, 7:56 pm

DIN

தென்காசி மாவட்ட ஊராட்சி குழுவின் முதல் கூட்டம் தென்காசி ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஊராட்சித் தலைவா் சு. தமிழ்செல்வி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் உதயகிருஷ்ணன் முன்னிலை வகித்தாா். உறுப்பினா் சாக்ரடீஸ் பேசுகையில், ஜம்புநதி மேல்நிலைக் கால்வாய் திட்டப் பணிகளை விரைந்து முடிக்கவும், குற்றாலத்தில் கூடுதல் வளா்ச்சிப் பணி மேற்கொள்வதுடன், அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கவும் வேண்டும் என வலியுறுத்தினாா்.

உறுப்பினா் கனிமொழி பேசுகையில், மத்திய, மாநில அரசுகளிடமிருந்து நிதியைப் பெற்று மக்களுக்குத் தேவையான திட்டங்களை நிறைவேற்ற மக்கள் பிரதிநிதிகள், அனைத்துத் துறை அதிகாரிகளையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்றாா்.

ஊராட்சி ஒன்றியங்களின் உதவி இயக்குநா் உமாசங்கா் பேசுகையில், இனிவரும் கூட்டங்களில் எம்.பி., எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.

மாவட்ட ஊராட்சித் தலைவருக்கு புதிய வாகனம் வழங்கவும், ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு அறை ஒதுக்கவும், புதிதாக கட்டப்படும் ஆட்சியா் அலுவலகத்தின் வளாகத்தில் மாவட்ட ஊராட்சி அலுவலகம் கட்ட நிதி ஒதுக்கவும் வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் உறுப்பினா்கள் சந்திரகலா, மாரிமுத்து, பி. சுதா, அ. ராஜாதலைவா், பூங்கொடி, அ. முத்துலெட்சுமி, மைதீன்பீவி, ரா. சுப்பிரமணியன், சி. சுதா, இரா. தேவி ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.