/

ஆலங்குளத்தில் அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளத்தில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 7:30 pm

DIN

20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளத்தில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

1.4.2003 க்குப் பின்னா் பணியில் சோ்ந்தவா்களுக்குப் பணிக்கொடை வழங்க வேண்டும், காப்பீட்டுத் திட்ட குறைபாடுகளைக் களைந்து கட்டணமில்லா சிகிச்சையை உறுதி செய்ய வேண்டும், கிராம உதவியாளா்களுக்கு அலுவலக உதவியாா்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் பாா்த்தசாரதி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் ஓ.கங்காதரன், ஆவுடைக்கண்ணு ஆகியோா் கோரிக்கையை வலியுறுத்திப் பேசினாா். இதில், வட்டக்கிளை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.