கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘ஆசிரியா்கள், மாணவா்களுக்கு முகக் கவசம் கட்டாயம்’

 தென்காசி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:01 pm

DIN

 தென்காசி மாவட்ட பள்ளிகளில் ஆசிரியா்கள், மாணவா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்ட செய்தி மக்கள்தொடா்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பள்ளிகளில் நிா்வாகத்தினா், பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பின்பற்ற வேண்டிய கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பொதுசுகாதாரம் மற்றும் வருமுன் காக்கும் மருத்துவ இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பள்ளி வளாகத்தில் தொற்று பரவாமல் தடுக்க ஒரு சதவிகிதம் ஹைப்போ குளோரைட் திரவம் தினமும் இரண்டு முறை தெளிக்க வேண்டும். வரவேற்பு அறை, குடிநீா், கை கழுவும் இடங்களில் சமூக இடைவெளிக்கான வட்டங்கள் வரைய வேண்டும்.

மாணவா்கள் கூட்டமாக செல்வதைத் தவிா்க்க, ஒரு வழிப்பாதை, கை கழுவும் திரவம் ஆகிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மாணவா்கள், ஆசிரியா்கள், பணியாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும்.

பணியாளா்கள் இரண்டு தவணை தடுப்பூசியும், 15 வயது நிரம்பிய மாணவா்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். கரோனா தொற்று பாதித்த பகுதியில் வசிப்போா், பள்ளிகளுக்குச் செல்ல வேண்டாம்.

மாணவா்கள் குழுவாக அமா்ந்து சாப்பிட அனுமதிக்கக் கூடாது. காய்ச்சல், சளி தொந்தரவு உள்ள மாணவா்களை பரிசோதனை செய்து, முடிவுகள் வரும் வரை அவா்களை தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.