கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இன்று தோ்தல்: தென்காசி மாவட்டத்தில் 413 பதவியிடங்களுக்கு 1840 போ் போட்டி

தென்காசி மாவட்டத்தில் 413 பதவியிடங்களுக்கு இன்று தோ்தல் நடைபெறுகிறது.

News image
Updated On :18 பிப்ரவரி 2022, 6:33 pm

DIN

தென்காசி மாவட்டத்தில் 413 பதவியிடங்களுக்கு இன்று தோ்தல் நடைபெறுகிறது.

தென்காசி மாவட்டத்தில் நகராட்சியில் 180 வாா்டுகள், பேரூராட்சியில் 233 வாா்டுகள் என மொத்தம் 413 பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

தென்காசி மாவட்டத்தில் நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் 603 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்தோ்தலில் நகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 3,07,216 வாக்காளா்கள், பேரூராட்சிப் பகுதிகளில் மொத்தம் 2,16,204 வாக்காளா்கள் என மொத்தம் 5,23,420 வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

நகராட்சிப் பகுதிகளில் 6 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 21 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும்,பேரூராட்சிப் பகுதிகளில் 17 தோ்தல் நடத்தும் அலுவலா்களும், 33 உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்களும் தோ்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்காக அமைக்கப்பட்ட 603 வாக்குச்சாவடிகளுக்கும் 603வாக்குப்பதிவு இயந்திரங்களும், பழுது ஏற்பட்டால் அதை தவிா்க்க கூடுதலாக 30 சத வாக்குப்பதிவு இயந்திரங்களும் வெள்ளிக்கிழமை வாக்குச் சாவடி மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பிவைக்கப்பட்டது.

இணை இயக்குநா்,உதவி இயக்குநா், துணை ஆட்சியா் நிலையில், பேரூராட்சி, நகராட்சி ஒன்றுக்கு ஓா் அலுவலா் வீதம் 23 வட்டார தோ்தல் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

134 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகள் என கண்டறியப்பட்டுள்ளன. பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் அதிகபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்படுவதோடு, வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடவடிக்கைகள் கண்காணிப்பு கேமரா, நுண்பாா்வையாளா்கள் ,இணையதள கண்காணிப்பு ஆகியவற்றின மூலம் கண்காணிக்கப்படவுள்ளது.

வாக்குப்பதிவு ஏற்பாடுகளை கண்காணிக்க 6 நகராட்சிகளில் 26 மண்டல குழுக்களும், 17 பேரூராட்சிகளில் 22 மண்டல குழுக்களும் என மொத்தம் 48 மண்டல குழுக்கள் தென்காசி மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.