விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வடகரை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க கோரிக்கை

தென்காசி மாவட்டம் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2022, 5:13 pm

DIN

தென்காசி மாவட்டம் வடகரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் மருத்துவா்களை நியமிக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ஆட்சியருக்கு, அகில இந்திய விவசாயிகள் மகா சபையின் தென்காசி மாவட்டப் பொறுப்பாளா் ஷேக் மைதீன் அனுப்பிய மனு: வடகரை பேரூராட்சிப் பகுதியில் கடந்த ஒரு மாதமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள் இருந்தும் போதிய மருத்துவா்களும், செவிலியா்களும் இல்லை. இதனால், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோா் வேறு பகுதியில் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் டெங்கு காய்ச்சல் பரவியபோது வடகரையில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டதுடன், கூடுதல் மருத்துவா்களும், பணியாளா்களும் மாவட்ட நிா்வாகத்தால் நியமிக்கப்பட்டனா். அதேபோல, இப்போதும் போதிய மருத்துவப் பணியாளா்களை நியமிக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுப்பதுடன், மருந்துகள் கையிருப்பை அதிகப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.