/

ஆலங்குளம் அருகே மின்சாரம் தொழிலாளி பலி

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :4 மார்ச் 2022, 7:35 pm

DIN

ஆலங்குளம் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா்.

ஆலங்குளம் அருகேயுள்ள நல்லூா் சண்முகையா மகன் அருண் பாலா(22). காசியாபுரம் விலக்கில் உள்ள காா் பழுது நீக்கும் மையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். வெள்ளிக்கிழமை காா் ஒன்றை தண்ணீா் கொண்டு கழுவிக் கொண்டிருக்கும் போது எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததாம். இதில் தூக்கி வீசப்பட்ட அவரை சக தொழிலாளா்கள் மீட்டு ஆலங்குளம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து ஆலங்குளம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.